அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஆந்திரத்தில் மருத்துவ மாணவர் தற்கொலை!

மருத்துவ மாணவர்களின் தற்கொலைகள் அதிகரிப்பு..

News image
Updated On :11 பிப்ரவரி 2025, 7:28 am

DIN

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ரங்கராய மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இறந்த மாணவர் ஆர். சாய் ராம்(23) என அடையாளம் காணப்பட்டது. அவர் தங்கியிருந்த விடுதி அறையின் மாணவர்கள் வேறொரு அறைக்கு படிக்க சென்றிருந்தபோது, மாணவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மாணவர் தற்கொலைக்கான காரணத்தை போலீஸார் விசாரித்து வருகின்றனர். காவல்துறையின் கூற்றுப்படி, சாய் ராம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நரசாபுரம் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர்.

இதற்கிடையில், தற்கொலை தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மருத்துவப் படிப்புக்குப் பயிற்சி பெறும் மாணவர்களும், மருத்துவ மாணவர்களும் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.