திரிவேணி சங்கமத்தில் 14.7 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்!

மகா கும்பமேளாவில் இன்று 14.7 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்.
 திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் பக்தர்கள்
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் பக்தர்கள்PTI
Published on
Updated on
1 min read

பிரயாக்ராஜின் கும்பமேளாவில் இன்று காலையில் 14.7 லட்சம் பக்தர்கள் புனித நீராடியதாக அந்த மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மகா சிவராத்திரி நாளான பிப். 26 வரை 45 நாள்களுக்கு நடைபெறும் இந்நிகழ்வில் மாகி பௌா்ணமி உள்ளிட்ட 6 நாள்களில் புனித நீராடுவது சிறப்புக்குரியதாகும்.

இந்த நிலையில், இன்று காலை கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் புனித சங்கமத்தில் 14.7 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். அவர்களில் 5 லட்சம் பேர் கல்பவாசிகள் ஆவர். 9,79 லட்சம் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

பிப்ரவரி 12 ஆம் தேதி நிலவரப்படி, திரிவேணி சங்கமத்தில் நீராடிய மொத்த பக்தர்களின் எண்ணிக்கை 48 கோடியைத் தாண்டியுள்ளது, இது இந்த பிரமாண்டமான நிகழ்வில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக உள்ளது.

இதற்கிடையில், சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், அமைச்சர்கள் குழு, சட்டப்பேரவை தலைவர், ஆளுநர், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் இன்று புனித நீராட உள்ளனர்.

பௌஷ பௌர்ணமியன்று தொடங்கிய மஹாகும்பமேளா உலகின் மிகப்பெரிய ஆன்மீக மற்றும் கலாசாரக் கூட்டமாகும், இது உலகம் முடிவதிலுமிருந்து பக்தர்களை ஈர்க்கிறது. இந்த பிரமாண்டமான நிகழ்வு பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை தொடரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com