அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

திரிவேணி சங்கமத்தில் 14.7 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்!

மகா கும்பமேளாவில் இன்று 14.7 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்.

News image
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் பக்தர்கள்- PTI
Updated On :13 பிப்ரவரி 2025, 7:08 am

DIN

பிரயாக்ராஜின் கும்பமேளாவில் இன்று காலையில் 14.7 லட்சம் பக்தர்கள் புனித நீராடியதாக அந்த மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மகா சிவராத்திரி நாளான பிப். 26 வரை 45 நாள்களுக்கு நடைபெறும் இந்நிகழ்வில் மாகி பௌா்ணமி உள்ளிட்ட 6 நாள்களில் புனித நீராடுவது சிறப்புக்குரியதாகும்.

இந்த நிலையில், இன்று காலை கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் புனித சங்கமத்தில் 14.7 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். அவர்களில் 5 லட்சம் பேர் கல்பவாசிகள் ஆவர். 9,79 லட்சம் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

பிப்ரவரி 12 ஆம் தேதி நிலவரப்படி, திரிவேணி சங்கமத்தில் நீராடிய மொத்த பக்தர்களின் எண்ணிக்கை 48 கோடியைத் தாண்டியுள்ளது, இது இந்த பிரமாண்டமான நிகழ்வில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக உள்ளது.

இதற்கிடையில், சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், அமைச்சர்கள் குழு, சட்டப்பேரவை தலைவர், ஆளுநர், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் இன்று புனித நீராட உள்ளனர்.

பௌஷ பௌர்ணமியன்று தொடங்கிய மஹாகும்பமேளா உலகின் மிகப்பெரிய ஆன்மீக மற்றும் கலாசாரக் கூட்டமாகும், இது உலகம் முடிவதிலுமிருந்து பக்தர்களை ஈர்க்கிறது. இந்த பிரமாண்டமான நிகழ்வு பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை தொடரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.