ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!விஜய் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நிறுத்தம்! பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை தேவை: சசி தரூர்

தில்லி ரயில் நிலையத்தின் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பலியான நிகழ்வுக்கு காங்கிரஸ் எம்பி சசி தரூர் ஞாயிற்றுக்கிழமை வருத்தம் தெரிவித்துள்ளார்.

News image

சசி தரூர் (கோப்புப் படம்)

Updated On :16 பிப்ரவரி 2025, 4:02 pm IST

தில்லி ரயில் நிலையத்தின் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பலியான நிகழ்வுக்கு காங்கிரஸ் எம்பி சசி தரூர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இது மிகவும் சோகமான நிகழ்வு. இவை ஈடுகட்ட முடியாத மனித இழப்புகள் ஆகும். கும்பமேளாவிலேயே நாம் அறியாத எண்ணிக்கையிலான இறப்புகளைப் பார்த்திருக்கிறோம்.

கட்டுக்கடங்காமல் கூட்டம் கூடும்போதெல்லாம் இதுபோன்ற சம்பவங்களை நாம் அழைப்பதாகத் தோன்றுகிறது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஏனெனில் மனித உயிரைப் பாதுகாப்பதே முதன்மையானதாக இருக்க வேண்டும் என்றார்.

மகா கும்பமேளாவுக்குச் செல்லும் ரயில்களில் பயணிக்க தில்லி ரயில் நிலையத்தில் மக்கள் காத்துக்கொண்டிருக்கும்போது சனிக்கிழமை இரவு திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி பலர் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடியது, சில விரைவு ரயில்கள் வர தாமதமானது, அதிக விலைக்கு சிலர் டிக்கெட்டுகளை விற்றுக்கொண்டிருந்தது உள்ளிட்டவை தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்காக காரணமாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும் கூட்ட நெரிசல் ஏற்பட முக்கிய காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக சிறப்பு உயர்நிலைக் குழு அமைத்து ரயில்வே துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.