மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களில் மலர் மாலைகள் சாற்றும் பணி!விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்! சீனு ராமசாமிஇடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை! யாருக்கு ஆதரவு? அன்புமணி பேட்டிராஜிநாமா செய்தவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுவது கேலிக்கூத்து! உயர் நீதிமன்றம் அதிருப்தி!ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!

தில்லியை ஆட்சி செய்ய பாஜகவில் ஆளில்லை: அதிஷி

தில்லியை ஆட்சி செய்ய பாஜகவில் ஆளில்லை என்று அதிஷி விமர்சித்திருப்பது பற்றி...

அதிஷி - PTI

Published On :

தில்லியை ஆட்சி செய்ய பாஜகவில் ஆளில்லை என்பது தெளிவாகியிருப்பதாக முன்னாள் முதல்வர் அதிஷி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

மேலும், பாஜகவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 48 பேரில் ஒருவரைகூட பிரதமர் மோடி நம்பவில்லை என்று அவர் விமர்சித்துள்ளார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் கடந்த 8 ஆம் தேதி வெளியாகின. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாள்களாகும் நிலையில், முதல்வர் மற்றும் அமைச்சரவை குறித்த அறிவிப்பை பாஜக வெளியிடாமல் உள்ளது.

இதனை விமர்சித்து அதிஷி பேசியதாவது:

”தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்திட்ட 10 நாள்கள் ஆகிறது. முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பெயர்களை பிப். 9ஆம் தேதியே பாஜக அறிவித்து, வளர்ச்சிக்கான பணிகளை தொடங்கும் என்றும் மக்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், பாஜகவில் தில்லியை ஆட்சி செய்வதற்கான ஆட்கள் இல்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது. 48 பேரில் ஒருவரையும் பிரதமர் மோடிக்கு நம்பவில்லை. பாஜகவிடம் தொலைநோக்கு பார்வையோ திட்டமிடலோ இல்லை.

அவர்கள் அனைவரும் தில்லி மக்களை கொள்ளையடிப்பார்கள் என்று பாஜகவுக்கு தெரியும். அரசை நடத்த திறன் கொண்டவர்கள் யாரும் இல்லையென்றால், மக்களுக்கான பணிகளை எப்படி செய்வார்கள்?” என விமர்சித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.