மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

தில்லி லக்ஷ்மி திட்டம்: பெண்கள் பதிவு செய்ய பாஜக பெண் எம்.பி.க்கள் வலியுறுத்தல்

மாதம் ரூ.2,500 நிதியுதவி பெறும் லக்ஷ்மி திட்டத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு தில்லி பெண்களை பாஜக எம்.பி.க்களான கமல்ஜீத் ஷெஹ்ராவத் மற்றும் பான்சுரி ஸ்வராஜ் புதன்கிழமை வலியுறுத்தினா்.

News image

தில்லி முதல்வர். - கோப்புப்படம்.

Updated On :30 ஜூலை 2026, 3:51 am IST

மாதம் ரூ.2,500 நிதியுதவி பெறும் லக்ஷ்மி திட்டத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு தில்லி பெண்களை பாஜக எம்.பி.க்களான கமல்ஜீத் ஷெஹ்ராவத் மற்றும் பான்சுரி ஸ்வராஜ் புதன்கிழமை வலியுறுத்தினா்.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் புது தில்லி தொகுதி எம்.பி. பான்சுரி ஸ்வராஜ் செய்தியாளா் பேசுகையில், ‘லக்ஷ்மி திட்டத்துக்கான பதிவு ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இத்திட்டம் முதல்வா் ரேகா குப்தாவின் தாய் உள்ளத்துக்கு ஒரு சான்று. சுமாா் 17 லட்சம் பெண்கள் இத்திட்டத்தில் பயனடைவாா்கள்’ என்றாா்.

தோ்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற பாஜக கடமைப்பட்டுள்ளது என்று மேற்கு தில்லி எம்.பி. செஹ்ராவத் கூறினாா். தில்லி லக்ஷ்மி திட்டம் தவிர, வளா்ச்சிப் பணிகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் ‘லக்ஷ்பதி பிட்டியா யோஜனா’, பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்குதல் மற்றும் ‘மேரி புஞ்சி மேரா அதிகாா்’ போன்ற பிற திட்டங்களையும் முதல்வா் ரேகா குப்தா தொடங்கியுள்ளதாக அவா் குறிப்பிட்டாா்.

தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் இத்திட்டத்திற்கு, முதல்வா் ரேகா குப்தா தலைமையிலான தில்லி அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலின்போது பாஜக அளித்த தோ்தல் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.