முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

கர்நாடக முதல்வர் பதவி பகிர்வு: கருத்துக் கூற சித்தராமையா மறுப்பு

முதல்வர் பதவி பகிர்வு விவகாரம் குறித்து கருத்துக் கூற முதல்வர் சித்தராமையா மறுத்துவிட்டார்.

News image

கர்நாடக முதல்வர் சித்தராமையா.

Updated On :19 பிப்ரவரி 2025, 3:23 am IST

முதல்வர் பதவி பகிர்வு விவகாரம் குறித்து கருத்துக் கூற முதல்வர் சித்தராமையா மறுத்துவிட்டார்.

முதல்வர் பதவி தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவி குறித்து முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோரது ஆதரவு அமைச்சர்கள் இருவேறு கருத்துகளைக் கூறிவருவதால், கர்நாடக காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரும், அமைச்சர் கே.என்.ராஜண்ணாவும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை பெங்களூரில் செய்தியாளர்களுக்கு முதல்வர் சித்தராமையா கூறியதாவது:

இவ்விவகாரம் தொடர்பாக நான் எதுவும் கூற விரும்பவில்லை. அமைச்சர் ராஜண்ணாவும், டி.கே.சிவகுமாரும் அவரவர் கருத்துகளை கூறியுள்ளனர்.

முதல்வர் பதவி தொடர்பாக காங்கிரஸ் மேலிடம்தான் முடிவு செய்யும் என்பதை எத்தனை முறை நான் கூறுவது? கட்சி மேலிடம் எடுக்கும் முடிவு அனைவருக்கும் பொருந்தும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.