எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மமதா மன்னிப்பு கேட்க வேண்டும்! - பாஜக தலைவர்கள்

மகா கும்பமேளா குறித்து பேசியதற்கு மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தல்

News image
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி- (கோப்புப் படம்)
Updated On :19 பிப்ரவரி 2025, 12:14 pm

DIN

மகா கும்பமேளா குறித்து அவதூறாகப் பேசியதற்கு மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கடந்த மாத இறுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர்; 60- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கிடையே இரு நாள்களுக்கு முன்பு தில்லி ரயில்வே நிலையத்தில் கும்ப மேளாவுக்குச் செல்லும் ரயில்களைப் பிடிப்பதற்காக ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 18 பக்தர்கள் உயிரிழந்தனர்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு கோடிக்கணக்கான மக்கள் வருவார்கள் என்று தெரிந்தும் மாநில அரசு எந்த ஏற்படும் செய்யவில்லை, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அரசு மறைக்கிறது, மகா கும்பமேளா, 'மரண' கும்பமேளாவாக மாறிவிட்டது" என்று கூறியிருந்தார்.

இதற்கு பாஜக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சுகந்த மஜும்தார், மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த் போஸுக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.

'மகா கும்பமேளா பற்றி மமதா பானர்ஜி பேசியது குற்றம், சட்டப்பேரவை குறிப்பில் இருந்து மமதா பானர்ஜி பேசியதை நீக்க வேண்டும்' என்று கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மக்கள் முன்பாக மமதா பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் மமதாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவும், மமதாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் ஹிந்து தர்மத்தை இழிவுபடுத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.