மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

கால்பந்து திடலில் பார்வையாளர்கள் கூடத்தில் வெடித்த பட்டாசு! 30 பேர் படுகாயம்

கேரளத்தில் கால்பந்து திடலில் வெடித்த பட்டாசு பார்வையாளர்கள் கூடத்தில் சிதறி விழுந்ததில் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

News image

பார்வையாளர்கள் கூடத்தில் சிதறி விழுந்த பட்டாசுகள், பதறும் மக்கள் - படம் | எக்ஸ்

Updated On :19 பிப்ரவரி 2025, 8:08 am IST

கேரளத்தில் கால்பந்து திடலில் வெடித்த பட்டாசு பார்வையாளர்கள் கூடத்தில் சிதறி விழுந்ததில் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட அரீகோடு பகுதியில் நெல்லிகுத் மற்றும் மாவூர் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது.

இறுதிப்போட்டி என்பதால் இப்போட்டி தொடங்குவதற்கு முன்பு திடலில் பட்டாசு வெடிக்கப்பட்டது. திடலில் வெடித்த பட்டாசு சிதறி பார்வையாளர்கள் கூடத்தில் விழுந்து வெடித்தது. இதனால் கூடத்தில் இருந்த பார்வையாளர்கள் சிதறி ஓடினர். இதில் சிலர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து சம்பவ இடத்தில் இருந்த அரீகோடு காவல் துறையினர் கூறியதாவது,

’’கால்பந்து போட்டி தொடங்குவதற்கு முன்பு திடலில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அப்போது பட்டாசு சிதறி பார்வையாளர்கள் கூடத்தில் விழுந்து வெடித்தது. இதனால் அச்சமடைந்த பார்வையாளர்கள் சிதறி ஓடினர். இதில் சிலர் காயமடைந்தனர்.

பட்டாசு வெடித்ததிலும் சிலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை’’ என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.