அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இந்தியாவில் ஒவ்வொரு தலித்தும் அம்பேத்கரே! - ராகுல் காந்தி

அரசமைப்பின் மூலம் தலித்துகளுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளார் அம்பேத்கர் - ராகுல் காந்தி

News image
ராகுல் காந்தி ரே பரேலியில் - PTI
Updated On :20 பிப்ரவரி 2025, 3:03 pm

DIN

ரே பரேலி : இந்தியாவிலுள்ள ஒவ்வொரு தலித்தும் அம்பேத்கரே என்று பேசியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

தாம் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ரே பரேலி தொகுதிக்கு இன்று(பிப். 20) சென்றுள்ள ராகுல் காந்தி அங்கு மாணவர்களுடன் இன்று பேசியதாவது, “ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தலித்துகள் கொடுமைகளை எதிர்கொண்டு வந்தனர். அம்பேத்கர் அரசமைப்பை உருவாக்கும்போது இந்த பாகுபாடுகளையும் கொடுமைகளையும் மனதிற்கொண்டு வடிவமைத்துள்ளார். அரசமைப்பின் மூலம் தலித்துகளுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளார் அம்பேத்கர்” என்று பேசியுள்ளார் ராகுல் காந்தி.

மேலும், அவர் பேசியதாவது, “இந்தியாவில் இன்று அரசமைப்பின் குரல் ஒடுக்கப்பட்டுள்ளது. இந்நாட்டின் மக்கள்தொகையில் 15 சதவிகிதம் தலித் சமூகப் பிரிவினரே. ஆனால், இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் உரிமையாளர்களும் தலைமைப் பதவிகளை அலங்கரிப்பவர்களும் இந்த விகிதத்தில் இல்லை(தலித் மக்கள் இந்த பதவிகளில் மிகக் குறைவாகவே உள்ளனர்).

அரசமைப்பை கசக்க சதித்திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அரசமைப்பை பாதுகாப்பது நமது கடமையாகும். தலித்துகள் கல்வியறிவு பெற வேண்டும்; அவர்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார். அப்போதுதான், அவர்களுக்கான சலுகைகளைப் பெற முடியும்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.