கும்பமேளா நீரை யோகி ஆதித்யநாத் குடிப்பாரா? பிரசாந்த் பூஷண் சவால்!

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பிரசாந்த் பூஷண் சவால்...
கும்பமேளாவில் யோகி ஆதித்யநாத் புனித நீராடியபோது.
கும்பமேளாவில் யோகி ஆதித்யநாத் புனித நீராடியபோது.ANI
Published on
Updated on
1 min read

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரைப் பொது இடத்தில் வைத்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குடிப்பாரா என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சவால் விடுத்துள்ளார்.

மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 26-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் இதுவரை 50 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடியுள்ளனர்.

இந்த நிலையில், பிரயாக்ராஜில் வெவ்வேறு இடங்களில் ஆற்று நீரை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அந்த நீரானது, மனிதர்கள் குளிப்பதற்கு உகந்த தரத்தில் இல்லை எனத் தெரிய வந்துள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

கோடிக்கணக்கானோர் நீராடியதால் மனிதக் கழிவுகள் அதிகளவில் ஆற்று நீரில் கலந்திருப்பதாகவும், இதன் காரணமாக அவற்றின் வழியே பரவும் ‘ஃபீக்கல் கோலிஃபார்ம்’ நுண்ணுயிரிகளால் நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து சட்டப்பேரவையில் பதிலளித்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், "சனாதன தர்மத்திற்கு எதிராக பொய்யான விடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. கங்கையும் மகா கும்பமேளாவும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை. பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு மட்டுமல்ல, குடிப்பதற்கும் ஏற்றதுதான். இதுபோன்ற அறிக்கைகள், மகா கும்பமேளாவை அவமதிக்கும் பிரசாரம்” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பொது இடத்தில் வைத்து கும்பமேளா நடைபெறும் திரிவேணி சங்கமத்தில் இருந்து நீரை எடுத்து யோகி ஆதித்யநாத்தும் அமைச்சர்களும் குடிக்க வேண்டும் என்று பிரசாந்த் பூஷண் சவால் விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com