இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

எதிர்பாராத கேள்விகளுடன் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு இயற்பியல் வினாத்தாள்!

எதிர்பாராத கேள்விகளுடன் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு இயற்பியல் வினாத்தாள் இருந்ததாகத் தகவல்.

News image
பொதுத் தேர்வு
Updated On :21 பிப்ரவரி 2025, 12:35 pm

DIN

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதில், இயற்பியல் பாடத்துக்கான தேர்வு இன்று நடைபெற்றது. அறிவியல் பாடப்பிரிவில் மிக முக்கிய பாடமாகக் கருதப்படும் இயற்பியல் பாடம் மாணவர்களுக்கு சற்று கடினமான பாடம் என்பதாலும், கட்-ஆப் மதிப்பெண் கணக்கிடப்படும் பாடம் என்பதாலும், இந்தத் தேர்வு மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற இயற்பியல் பாடத்தேர்வில் கொடுக்கப்பட்ட வினாத்தாள் சற்று கடினமானதாக இருந்ததாகவும், சரியான விடையைத் தேர்வு செய்யும் பிரிவில் மிகவும் நுணுக்கமான கேள்விகள் இடம்பெற்றிருந்ததாகவும், கணித முறையில் அமைந்த வினாக்கள் மிக நீண்டதாக இருந்ததாகவும் மாணவர்கள் கூறியுள்ளார்கள்.

மேலும், சில எதிர்பாராத கேள்விகள் இடம்பெற்றிருந்ததாகவும் ஒரு சில மாணவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த தேர்வில் அதிக பயிற்சி பெற்ற மாணவர்களுக்கும் நீளமான கேள்விகளால் நேர மேலாண்மையில் சிக்கல் ஏற்பட்டதாகவும் கூறியிருக்கிறார்கள்.

அதாவது, ஒரு சில மாணவர்கள்தான் தேர்வை உரிய நேரத்துக்குள் முழுமையாக எழுதி முடித்ததாகவும், பல மாணவர்களால் உரிய நேரத்துக்குள் முடிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

முழு மதிப்பெண் எடுக்க திட்டமிட்டிருந்த மாணவர்களும் இந்த முறை 95க்கும் அதிகமான மதிப்பெண் பெறுவதே கடினமாக இருக்கலாம் என்றும் சில ஆசிரியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.