விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடி: பிரதமா் மோடி நாளை விடுவிப்பு

பிஎம்-கிஸான் திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு 19-ஆவது தவணையாக சுமாா் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடி
பிரதமா் நரேந்திர மோடி
பிரதமா் நரேந்திர மோடி
Updated on
1 min read

பாட்னா: பிஎம்-கிஸான் திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு 19-ஆவது தவணையாக சுமாா் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடியை பிரதமா் மோடி திங்கள்கிழமை(பிப்.24) விடுவிக்கவுள்ளாா்.

இரண்டு ஹெக்டோ் வரையிலான நிலமுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கும் பிஎம்-கிஸான் திட்டம் கடந்த 2019-இல் தொடங்கப்பட்டது.

நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பலனடையும் இத்திட்டத்தின்கீழ் 19-ஆவது தவணையாக ரூ.23,000 கோடியை பிரதமா் மோடி திங்கள்கிழமை(பிப்.24) விடுவிக்கவுள்ளாா்.

பிகாா் மாநிலம், பாகல்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கான நிதியை பிரதமா் விடுவிக்கவுள்ளாா்.

பிரதமர் நரேந்திர மோடி பாகல்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு ஒரு நாள் முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை பிகாரில் தேர்தல் அரசியல் சூடு பிடித்துள்ளது.

பிகாா் மாநிலம், பாகல்பூரில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் செளஹான் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். பிகாரில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கிறது. இதை மனதில் கொண்டு, பிரதமரின் நிகழ்ச்சி பிகாரில் நடத்தப்படுவதாக ஆர்ஜேடி உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ள நிலையில், இதனை மறுத்துள்ள மத்தியதியப் பிரதேச முன்னாள் முதல்வர், "இன்று மோடி தேர்தல்கள் இல்லாத மத்தியப் பிரதேசத்திற்குச் சென்றதையும் எதிர்க்கட்சிகள் அறிந்திருக்க வேண்டும்.

நாளை, பிகார் நிகழ்ச்சிக்குப் பிறகு, தேர்தல்கள் எதுவும் நடைபெறாத அஸ்ஸாமுக்கு பிரதமர் செல்ல உள்ளார். மோடி பங்களா வசதிகளை அனுபவிப்பதை விட மக்களோடு இருப்பதை விரும்புகிறார்" என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com