பாஜக ஆட்சியில் அஸ்ஸாமின் பொருளாதாரம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாம் தலைநகர் குவாஹட்டியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை இன்று (பிப். 25) பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்தார். இதன் தொடக்க விழாவில் அந்த மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்பட அமைச்சர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்றுப் பேசினர்.
உச்சி மாநாட்டை தொடக்கிவைத்து பிரதமர் மோடி பேசியதாவது,
அஸ்ஸாம் முதலீட்டாளர்களுக்கு விருப்பமான இடமாக மாறியுள்ளது. அரசியல் ஸ்திரத்தன்மை, நல்லாட்சி மற்றும் சீர்திருத்தங்களே இந்தியாவின் மீதான உலக நம்பிக்கையை அதிகரிக்கக் காரணமாகும்.
வடகிழக்கு மாநிலங்களின் உற்பத்தி மையமாக அஸ்ஸாம் மாறும். உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், இந்தியாவின் பொருளாதாரம் நல்ல வளர்ச்சியடைந்து வருகிறது. பாஜக ஆட்சியில் அஸ்ஸாமின் பொருளாதாரத்தின் மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாக இரட்டிப்பாகியுள்ளது. இந்தியாவின் செழிப்பில் கிழக்கு இந்தியா முக்கிய பங்கு வகித்தது என்பதற்கு வரலாறு சாட்சி என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மதுரையில் தே.ஜ. கூட்டணி பொதுக்கூட்டம் - புகைப்படங்கள்

பிரதமர் மோடி பட்டியலிட்ட திமுக அரசின் மோசடிகள்!

ஊழல் செய்வதில் திமுக அமைச்சர்களிடையே போட்டி : பிரதமர் மோடி

பதற்றத்தில் உலக நாடுகள்... வளர்ச்சியை நோக்கி இந்தியா : பிரதமர் மோடி
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

