முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் இதைச் செய்யாவிட்டால்?

குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அடையாளம் சரிபார்ப்புப் பணியை நிறைவு செய்ய வேண்டும்.

News image

கோப்புப் படம்.

Updated On :25 பிப்ரவரி 2025, 3:29 pm IST

நாடு முழுவதும் குடும்ப அட்டை எனப்படும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும், தங்களது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் அடையாளங்களை சரிபார்த்து முடித்திருக்க வேண்டும்.

கேஒய்சி எனப்படும் அடையாளம் சரிபார்க்கும் பணி பல மாதங்களாக நடைபெற்று வருகிறது.

ரேஷன் பொருள்கள் வாங்கும் கடைகளிலேயே அடையாளம் சரிபார்ப்புப் பணி நடைபெற்று வரும் நிலையில், இதற்கான கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் அடையாளம் சரிபார்க்கப்படாவிட்டால், ரேஷன் அட்டைக்கு பொருள்கள் வழங்குவது நிறுத்தப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது மட்டுமல்லாமல், குடும்ப அட்டையிலிருந்து கேஒய்சி எனப்படும் அடையாளம் சரிபார்க்கப்படாதவரின் பெயர் நீக்கப்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இன்னும் ஒரு மாத காலம் இருக்கும் நிலையில், நாடு முழுவதும் ஒன்பது லட்சம் பேர் கேஒய்சி சரிபார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

இறந்தவர்களின் பெயர்களை நீக்காமல் அவர்களது பெயர்களில் ரேஷன் பொருள்கள் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளை சரி செய்யவே இந்த நடைமுறை தொடங்கியிருக்கிறது. எனவே, இதுவரை கேஒய்சி சரிபார்க்காதவர்கள், அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று கைவிரல் ரேகை வைத்து அடையாளத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.