இனியாவது பிரதமர் மோடி மணிப்பூருக்குச் செல்ல வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் மனோஜ் குமார் கூறியுள்ளார்.
மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு குக்கி - மெய்தி சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. அதுமுதல் மணிப்பூரில் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அங்கு பதட்ட சூழ்நிலை இருந்து வருகிறது.
பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்குச் செல்லவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான மனோஜ் குமார்,
இதையும் படிக்க | மணிப்பூர் கிராமத்தில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!
மணிப்பூரில் நடைபெற்ற வன்முறைகளுக்கு முதல்வர் பிரேன் சிங் முன்பே மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். கிட்டத்தட்ட 19- 20 மாதங்களுக்குப் பிறகு, நீங்கள் மன்னிப்பு கேட்கிறீர்கள். அது எப்படி உதவும்?
பிரதமர் மோடி ஒரு முறையாவது மணிப்பூருக்குச் செல்ல வேண்டும். இனிமேலாவது செல்ல வேண்டும். பிரதமரின் பயணம் மணிப்பூர் குணமடைய உதவும். அங்கு இயல்புநிலை, அமைதியை மீட்டெடுப்பது இன்று அவசரத் தேவை.
மணிப்பூர் விவகாரத்தில் மாநில அரசும், மத்திய அரசும் தோல்வியடைந்துள்ளன' என்றார்.
மணிப்பூர் மாநிலத்தின் மேற்கு இம்பால் மாவட்டத்தில் இன்று (ஜன.1) அதிகாலை கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகாா்: நம்பிக்கை வாக்கெடுப்பில் சாம்ராட் செளதரி அரசு வெற்றி

பிகாரில் பாஜகவுக்கு முதல்வா் பதவி அளித்தது ஏன்? நிதீஷ் குமாா் கட்சி விளக்கம்

நிதீஷ் குமாா் ராஜிநாமா - பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்பு

ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவராக நிதீஷ் குமார் மீண்டும் தேர்வு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


