புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மும்பையில் சோட்டா ராஜனின் உதவியாளர் கைது

32 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சோட்டா ராஜனின் உதவியாளரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

News image

Photo credit ANI

Updated On :3 ஜனவரி 2025, 11:30 am

DIN

32 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சோட்டா ராஜனின் உதவியாளரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் உதவியாளர் ராஜு விகன்யா என்கிற விலாஸ் பல்ராம் பவார். இவர் மீது மும்பையில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கடத்தல், சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்தது என்பன உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் அவர் வியாழக்கிழமை மும்பையின் செம்பூர் பகுதியில் காணப்பட்டதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

உடனே அங்கு சென்ற மும்பை காவல்துறையினர் விலாஸ் பல்ராம் பவாரை கைது செய்தனர். பின்னர் அவரை மும்பையில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

கைதான விலாஸ் பல்ராம் பவார் கடந்த 32 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.