
உத்தரப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் மீரட்டில் 5 பேர் அடங்கிய ஒரு குடும்பத்தினர் புதன்கிழமையில் இருந்து காணாமல் போனதாக அண்டை வீட்டார் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காணாமல் போயிருந்த குடும்பத்தினரின் பூட்டியிருந்த வீட்டின் கூரை வழியாக உள்நுழைந்தனர். உள்ளே சென்றதும், காணாமல் போயிருந்தவர்கள் வீட்டின் தரையில் சடலங்களாகக் கிடப்பது தெரிய வந்தது.
வீட்டிலிருந்த பொருள்கள் அனைத்தும் சீர்குலைக்கப்பட்டு, சிதறிக் கிடந்ததுடன், தொடர்ந்து சோதனை மேற்கொண்டதில், உயிரிழந்தவர்களின் 3 பெண் குழந்தைகளும் பெட்டிக்குள் உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டனர். 3 குழந்தைகளும் 10 வயதிற்குள்பட்டவர்களே.
மேலும், உயிரிழந்து கிடந்த 5 பேரின் தலையிலும் காயம் இருப்பது தெரிய வந்தது. தலையில் பலமாக தாக்கியதால், அவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம், தனிப்பட்ட பகையின் காரணமாக நடத்தப்பட்ட கொலை சம்பவமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், உடற்கூறாய்வுக்காக 5 பேரின் உடல்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், அறிக்கை வெளிவந்தவுடன்தான், உண்மை தெரிய வரும் என்று காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.