6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோகல்புரி காவல் நிலையத்தில் தீ விபத்து

தில்லியில் உள்ள கோகல்புரி காவல் நிலையத்தின் 4-ஆவது மாடியில் உள்ள ஒரு அறையில் வெள்ளிக்கிழமை தீ விபத்து

News image
கோப்புப் படம்
Updated On :10 ஜனவரி 2025, 7:38 pm

Din

தில்லியில் உள்ள கோகல்புரி காவல் நிலையத்தின் 4-ஆவது மாடியில் உள்ள ஒரு அறையில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் அலுவலக உபகரணங்கள் சேதமடைந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறையைச் சோ்ந்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:

இந்தச் சம்பவம் குறித்து மதியம் 1.20 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று தீயை அணைத்தனா்.

தீ விபத்து ஏற்பட்ட அறையில் எல்இடி பேனல்கள், கணினி அமைப்புகள் மற்றும் தளபாடங்கள் சேதமடைந்தன. ஆனால் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

வயரிங்கில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடா்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.