இழுபறியாகும் ராகுல் வழக்கு!

வழக்குரைஞர்கள் போராட்டத்தால் மீண்டும் ஒத்திவைப்பு!
ராகுல் காந்தி
ராகுல் காந்திகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

ராகுல் காந்தி மீது 2018 ஆம் ஆண்டில் தொடுக்கப்பட்ட வழக்கு ஜனவரி 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கர்நாடகத்தில் 2018 ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பாஜக நிர்வாகி மீதான ஆட்சேபகரமான கருத்துகளைக் தெரிவித்தாகக் கூறி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது பாஜகவைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா 2018 ஆம் ஆண்டில் புகார் அளித்தார். இன்று வரையில் நீடிக்கும் இந்த வழக்கில் ஒரு பகுதியாக, ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு 2023 ஆம் ஆண்டில் டிசம்பரில் உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜரானார்; தொடர்ந்து, ஜூலை மாதத்தில் ராகுல் மீது அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில், ரூ. 50,000 மதிப்பிலான இரண்டு பத்திரங்கள் மூலம் ராகுலுக்கு சிறப்பு நீதிபதி ஜாமீன் வழங்கினார்.

இதனையடுத்து, நீதிமன்றத்தில் ராகுல் ஆஜரானபோது, அவர் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்குடையவை என்று கூறப்பட்டதால், குற்றத்தை நிரூபிக்க ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு புகார்தாரருக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, நீதிபதி இல்லாததால், டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்டிருந்த விசாரணையும் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், குறுக்கு விசாரணையை முடிக்காததால், கடந்த ஜனவரி 2 ஆம் தேதி திட்டமிடப்பட்ட விசாரணையும் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே, வழக்குரைஞர்களின் போராட்டத்தால் ராகுல் காந்தி மீதான வழக்கு ஜனவரி 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com