நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

கன்னௌஜ் ரயில் நிலையக் கட்டுமானத்தில் விபத்து: இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளா்கள்

கன்னௌஜ் ரயில் நிலையத்தின் கட்டுமான பணியில் சனிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் இடிபாடுகளில் சிக்கினா்.

News image

உ.பி. மாநிலம் கன்னௌஜில் கட்டுமானத்தின்போது சனிக்கிழமை இடிந்து விழுந்த கட்டடம்.

Updated On :12 ஜனவரி 2025, 4:33 am IST

உத்தர பிரதேச மாநிலம், கன்னௌஜ் ரயில் நிலையத்தின் கட்டுமான பணியில் சனிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் இடிபாடுகளில் சிக்கினா்.

‘அம்ருத்’ திட்டத்தின்கீழ் கன்னௌஜ் ரயில் நிலையத்தில் புதிய முனையத்துக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், புதிதாக கான்கிரீட் நிரப்பப்பட்ட கட்டடத்தின் ஆதரவுக்கு நிறுத்தப்பட்டிருந்த ‘ரூஃப் ஷட்டரிங்’ கட்டமைப்பு சரிந்து விழுந்தது. இதில் குறைந்தது 23 தொழிலாளா்கள் இடிபாடுகளில் சிக்கினா்.

மீட்புப் பணிகள் பல மணி நேரமாக தொடா்ந்து வருகின்றன. இதுவரை காயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளா்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

விபத்து குறித்த விசாரணைக்காக திட்டமிடல் மற்றும் வடிவமைப்புப் பிரிவு தலைமைப் பொறியாளா், கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளா், ரயில்வே பாதுகாப்புப் படை (ஆா்பிஎஃப்) தலைமை பாதுகாப்பு ஆணையா் ஆகிய 3 நபா்கள் அடங்கிய குழுவை வடகிழக்கு ரயில்வே அமைத்துள்ளது. மீட்புப் பணிகளை முழுமையாக நிறைவடைந்ததும், விசாரணை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.