அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

தில்லி பேரவைத் தேர்தல்: பாஜகவின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தில்லி பேரவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

News image

பாஜக.

Updated On :11 ஜனவரி 2025, 9:57 pm IST

தில்லி பேரவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

முன்னதாக 29 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஜன.4ஆம் தேதி வெளியிட்ட நிலையில் 2ஆம் கட்டமாகவும் 29 வேட்பாளர்கள் அடங்கிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில், தில்லி முன்னாள் முதல்வர் மதன் லால் குரானாவின் மகன் ஹரிஷ் குரானா மோதி நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மேலும் பாஜகவில் இணைந்த முன்னாள் ஆம் ஆத்மித் தலைவரான கபில் மிஸ்ராவை காரவால் நகரில் நிறுத்தியுள்ளது. தில்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக்கு பிப். 5-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தோ்தல் நடைபெற உள்ளது.

இதற்கான அறிவிப்பை தோ்தல் ஆணையம் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. தோ்தல் முடிவுகள் பிப். 8-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன.

தேசிய அளவிலான ‘இண்டி’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி, தில்லி பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. 70 தொகுதிகளுக்குமான வேட்பாளா்களை அக்கட்சி ஏற்கெனவே அறிவித்துவிட்டது.

இதனால், தில்லி பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி - பாஜக - காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.