கடும் குளிர் காரணமாக ஜெய்ப்பூர் உள்பட 25 மாவட்டங்களில் 1 - 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் உள்பட வட மாநிலங்களில் கடந்த சில நாள்களாக குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும், காலை வேளைகளில் அடா் மூடுபனி நிலவி வருகிறது.
இதனால் வடமாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜெய்ப்பூர் உள்பட 25 மாவட்டங்களில் 1 - 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று(ஜன.13) விடுமுறை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மகர சங்கராந்திக்காக ஜனவரி 14ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் ஜனவரி 15-ஆம் தேதி மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிகானேர், ஜெய்ப்பூர், அஜ்மீர், பரத்பூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மேக மூட்டம், மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதோடு 15 மாவட்டங்களுக்கு அடர் பனிமூட்டம் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. எனவே, கடும் குளிரால், ஒருசில மாவட்டங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஓரிரு நாள்கள் முதல், நான்கு நாள்கள் வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப். 28 வரை மழைக்கு வாய்ப்பு

சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

வாக்குப்பதிவு: புதுச்சேரியில் ஏப். 7 - 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


