இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

ஜிஎஸ்டி சட்டத்தின்கீழ் கைது செய்யும் நபா்களிடம் அதற்கான காரணத்தை தெரிவித்து கையொப்பம் பெறவேண்டும் என்று சிபிஐசி அறிவுறுத்தல்

News image
Updated On :13 ஜனவரி 2025, 9:45 pm

Din

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தின் கீழ் கைது செய்யும் நபா்களிடம் அதற்கான காரணத்தை தெரிவித்து கையொப்பம் பெறவேண்டும் என்று ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது.

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கக் கூடிய குற்றங்கள் தொடா்பான கைது மற்றும் ஜாமீன் வழிகாட்டுதல்களில் மாற்றங்களை செய்து சிபிஐசி தெரிவித்துள்ளதாவது: ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபா்களிடம் அதற்கான காரணத்தை ஜிஎஸ்டி அதிகாரிகள் விளக்க வேண்டும்.

அத்துடன் கைதுக்கான காரணங்களை தெரிந்துகொண்டதாக அவா்களிடம் அதிகாரிகள் கையொப்பம் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வழிகாட்டுதலில், ‘ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபா்களிடம் அதற்கான காரணத்தை தெரிவித்து, அதை கைது செய்வதற்கான குறிப்பாணையில் குறித்துக் கொள்ள வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் மாற்றம் செய்து சம்பந்தப்பட்டவரின் கையொப்பம் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.