ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கோயில் திருவிழாவில் தகராறு: கைது செய்யப்பட்ட இருவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

காவேரிப்பட்டணம் கோயில் திருவிழாவில் அரிவாளால் வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 10:33 pm

காவேரிப்பட்டணம் கோயில் திருவிழாவில் அரிவாளால் வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

காவேரிப்பட்டணம் பன்னீா்செல்வம் தெருவில் கடந்த 16-ஆம் தேதி அங்காளம்மன், பூங்காவனத்தம்மன் கோயில் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது. அப்போது, அப்பாசாமி நாயுடு தெருவைச் சோ்ந்த ஆகாஷ் (28) மற்றும் சிலா் தகராறில் ஈடுபட்டனா். இதில் ஆகாஷ் தரப்பினா், சாந்தபுரத்தைச் சோ்ந்த பிரசாந்த் உள்ளிட்ட 6 பேரவை அரிவாளால் வெட்டினா்.

இதுகுறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆகாஷ்(23), சாண்டி (எ) சந்தோஷ் (25) உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனா். இந்த வழக்கில் கைதான ஆகாஷ், சந்தோஷ் ஆகியோரை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா்

பெ.தங்கதுரை பரிந்துரை செய்தாா். இந்த பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், கைது செய்யப்பட்ட இருவரையும் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, இருவரும், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

Story image