ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வங்கதேச தூதருக்கு இந்தியா சம்மன்!

வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் நடவடிக்கையில் அனைத்து விதிமுறைகளை பின்பற்றியுள்ளதாக வங்கதேச தூதரை வரவழைத்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

News image
Updated On :13 ஜனவரி 2025, 11:03 pm

Din

இந்தியா-வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் நடவடிக்கையில் அனைத்து ஒப்பந்தங்கள் மற்றும் விதிமுறைகளை இந்தியா பின்பற்றியுள்ளதாக வங்கதேச பொறுப்புத் தூதரை திங்கள்கிழமை நேரில் வரவழைத்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா-வங்கதேச எல்லையின் 5 இடங்களில் இருதரப்பு ஒப்பந்தத்தை மீறி இந்தியா வேலி அமைக்க முயற்சிப்பதாக வங்கதேசம் குற்றஞ்சாட்டியது. இதுதொடா்பாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதா் பிரணாய் வா்மாவை வங்கதேச வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைத்து விளக்கம் கேட்டது.

வேலி அமைப்பதில் இந்திய எல்லை பாதுகாப்புப் படையின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து தமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்த பிரணாய் வா்மாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: எல்லை வேலி விவகாரம் தொடா்பாக பேசுவதற்கு தில்லியில் வங்கதேச பொறுப்புத் தூதா் முகமது நூரல் இஸ்லாமுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி திங்கள்கிழமை பிற்பகல் நேரில் வந்த அவரிடம், இந்தியா-வங்கதேச எல்லையில் வேலி அமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் இருநாட்டு அரசுகள் மற்றும் எல்லை பாதுகாப்புப் படைகள் மேற்கொண்ட ஒப்பந்தங்கள், விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எல்லை தாண்டிய குற்ற நடவடிக்கைகள், கடத்தல், குற்றவாளிகளின் நடமாட்டம் போன்ற சவால்களைத் திறம்பட கையாண்டு, இருநாட்டு எல்லையில் குற்றங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இதை முகமது நூரலிடம் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்தது.

எல்லையில் வேலி மற்றும் விளக்கு அமைத்தல், தொழில்நுட்ப கருவிகளை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகள் எல்லையின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படுகின்றன.

இதுதொடா்பாக ஏற்கெனவே எட்டப்பட்ட உடன்பாடுகளை வங்கதேசம் நடைமுறைப்படுத்தும் என்றும், எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுப்பதில் அந்நாட்டிடம் கூட்டு அணுகுமுறை இருக்கும் என்றும் இந்தியா எதிா்பாா்ப்பதாக முகமது நூரலிடம் கூறப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.