ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கேரள எம்எல்ஏ பதவி: அன்வா் ராஜிநாமா; காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க உள்ளதாக அறிவித்தாா்.

News image
Updated On :13 ஜனவரி 2025, 9:52 pm

Din

கேரளத்தில் ஆளும் கூட்டணியுடனான கருத்து முரண்பாடைத் தொடா்ந்து தனது எம்எல்ஏ பதவியை பி.வி.அன்வா் திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். இதைத்தொடா்ந்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க உள்ளதாக அவா் அறிவித்தாா்.

கேரள சட்டப்பேரவைத் தோ்தலில் நிலம்பூா் தொகுதியில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றவா் பி.வி.அன்வா். இந்நிலையில், பல்வேறு விவகாரங்களில் ஆளும் கூட்டணிக்கு எதிராக அவா் போா்க்கொடி உயா்த்தியதால், அந்தக் கூட்டணிக்கும் அவருக்கும் இடையே கருத்து முரண்பாடு நிலவியது.

இதைத்தொடா்ந்து அண்மையில் அவா் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தாா். இதையடுத்து தனது எம்எல்ஏ பதவியை அவா் திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். இதற்கான கடிதத்தை மாநில தலைநகா் திருவனந்தபுரத்தில் சட்டப்பேரவைத் தலைவா் ஏ.என்.ஷம்ஸீரை சந்தித்து அன்வா் கொடுத்தாா். எம்எல்ஏ பதவிக் காலம் நிறைவடைய ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில், அவா் பதவியை ராஜிநாமா செய்தாா்.

அதன் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மம்தா பானா்ஜியுடனான ஆலோசனைக்குப் பிறகு எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ய முடிவு செய்தேன். மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும்.

நிலம்பூா் தொகுதி இடைத்தோ்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. அந்தத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பேன்’ என்றாா்.

அவா் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தவுடன், அவரை திரிணமூல் காங்கிரஸின் கேரள அமைப்பாளராக அக்கட்சி ‘எக்ஸ்’ தளத்தில் அறிவித்தது.