திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

காவலர் எழுத்துத் தேர்வில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் பாணியில் மோசடி! சிக்கியது எப்படி?

மும்பையில் நடந்த காவலர் எழுத்துத் தேர்வில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் பாணியில் மோசடி செய்தவர் கைது

News image
கோப்புப்படம்
Updated On :13 ஜனவரி 2025, 5:39 am

DIN

வசூல்ராஜா எம்பிபிஎஸ் பாணியில், மும்பையில் நடைபெற்ற காவலர் எழுத்துத் தேர்வில் காதில் ப்ளூடூத் மாட்டி மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை காவல்துறையில், வாகன ஓட்டுநர் பணிக்கான எழுத்துத் தேர்வில் பங்கேற்ற 22 வயது இளைஞர், தனது காதில், ஒரு டியூப் மாத்திரை அளவுள்ள ப்ளூ டூத் வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால், எதிர்பாராதவிதமாக அவரை தேர்வு கண்காணிப்பாளர்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டனர்.

தேர்வின்போது, குஷ்னா தால்வியின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அவரை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்தபோது அவர் யாருக்கோ கேள்விகளை சொல்வது தெரிந்தது. அவரை சோதித்த போது காதில் ப்ளூடூத் பொருத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவருக்கு பதில்களை சொல்ல உதவிய நண்பர் கைது செய்யப்பட்டு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.