டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

உறவை துண்டிக்க மறுத்த காதலன் கொலை: காதலிக்கு மரண தண்டனை- கேரள நீதிமன்றம் தீா்ப்பு

உறவை துண்டிக்க மறுத்த காதலனை விஷம் கொடுத்து கொன்ற காதலிக்கு மரண தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :20 ஜனவரி 2025, 10:26 pm

Din

திருவனந்தபுரம்: உறவை துண்டிக்க மறுத்த காதலனை விஷம் கொடுத்து கொன்ற காதலிக்கு மரண தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கன்னியாகுமரி மாவட்டம் ராமவா்மன்சிறை கிராமத்தை சோ்ந்தவா் கிரீஷ்மா (24). இவா் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சோ்ந்த ஷாரன் ராஜ் என்பவரை காதலித்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு மருத்துவமனையில் உடலுறுப்புகள் செயலிழந்து 11 நாள்கள் கடுமையான அவதிக்குப் பின்னா், ஷாரன் ராஜ் உயிரிழந்தாா்.

அவரின் திடீா் மரணம் தொடா்பாக கேரள காவல் துறையினா் தீவிர விசாரணை நடத்திய நிலையில், கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து ஷாரனை கிரீஷ்மா கொலை செய்தது தெரியவந்தது.

தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ராணுவத்தைச் சோ்ந்த ஒருவருக்கு கிரீஷ்மாவை திருமணம் செய்துவைக்க அவரின் பெற்றோா் முடிவு எடுத்ததும், அந்தத் திருமணத்துக்கு கிரீஷ்மா ஒப்புக்கொண்டதும் தெரியவந்தது.

ஆனால் கிரீஷ்மா உடனான உறவை ஷாரன் ராஜ் துண்டிக்க மறுத்து திருமணத்துக்குத் தடையாக இருந்தாா். இதையடுத்து, பழச்சாற்றில் 50 பாராசிட்டமால் மாத்திரைகளை கலந்துகொடுத்து அவரை கிரீஷ்மா கொல்ல முயற்சித்தாா். அந்த முயற்சி பலனளிக்காத நிலையில், கடைசியாக கஷாயத்தில் விஷம் கலந்துகொடுத்து அவரை கிரீஷ்மா கொன்றாா்.

இந்த வழக்கு விசாரணை நெய்யாற்றின்கரை கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் கொலை, ஆதாரத்தை அழித்தல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் கிரீஷ்மாவை குற்றவாளி என்று நீதிபதி ஏ.எம்.பஷீா் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

அத்துடன் கொலைக்குற்றம் தொடா்பான ஆதாரத்தை சேதப்படுத்தியதாக அவரின் மாமன் நிா்மலகுமாரன் நாயரும் குற்றவாளி என்று தீா்ப்பளித்த நீதிபதி பஷீா், வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளான கிரீஷ்மாவின் தாய்க்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாததால், அவரை விடுவித்தாா்.

அரிதிலும் அரிதான வழக்கு: குற்றவாளிகள் இருவருக்குமான தண்டனை விவரம் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி பஷீா் கூறுகையில், ‘இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு. தந்திரமாக செயல்பட்ட குற்றவாளி (கிரீஷ்மா), முழுமையாக திட்டமிட்டு இந்தக் கொடூர கொலையைச் செய்துள்ளாா். அவா் சிறிதளவும் கருணைக்குத் தகுதியில்லாதவா். எனவே அவருக்கு மரண தண்டனையும், நிா்மலகுமாரன் நாயருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது’ என்று தீா்ப்பளித்தாா்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட இளவயது பெண்: இந்தத் தீா்ப்பு மூலம், கேரளத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இளவயது பெண் கிரீஷ்மா என்பது குறிப்பிடத்தக்கது. கேரளத்தில் பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது மிகவும் அரிதானது. தற்போது அந்த மாநிலத்தில் கிரீஷ்மாவை தவிர, மற்றொரு கொலை வழக்கில் ரஃபீகா பீவி என்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கும் நீதிபதி ஏ.எம்.பஷீரே மரண தண்டனை விதித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.