மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பேருந்துக்குக் காத்திருந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: பெங்களூரில் அதிர்ச்சி!

பெங்களூரில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

News image
கோப்புப் படம்
Updated On :21 ஜனவரி 2025, 7:53 am

DIN

பெங்களூரில் பேருந்துக்குக் காத்திருந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரின் கே.ஆர். மார்க்கெட் பகுதியில் ஞாயிறு (ஜன. 19) இரவு 11 மணியளவில் யேலஹங்கா செல்லும் பேருந்துக்கக பெண் ஒருவர் காத்திருந்தார். அப்போது அங்கிருந்த நபரிடம் பேருந்து வருகின்ற நேரம் குறித்து விசாரித்துள்ளார்.

அந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட அந்த நபர் தன்னை நல்லவனைப் போல காட்டிக்கொண்டு பேருந்து நிற்கும் வேறு நிறுத்தத்திற்கு அந்தப் பெண்ணை அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார்.

பின்னர், அந்தப் பெண்ணை குடோன் வீதிக்கு அழைத்துச் சென்ற அந்த நபர் தனது ஆட்களுடன் அவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளான். மேலும், அவரிடமிருந்த உடைமைகளையும் அவர்கள் திருடியுள்ளனர்.

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் சம்பவம் நடந்த பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக மேலதிக விவரங்களைக் காவல்துறையினர் இன்னும் வெளியிடவில்லை.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா, “ஒரு காலத்தில் கலாச்சாரம், மதிப்புகள் மற்றும் பாதுகாப்புக்கு பெயர் பெற்ற கர்நாடகம், இப்போது கொள்ளை மற்றும் குற்றச் சம்பவங்களின் மையமாக மாறியுள்ளது. பேருந்துக்காகக் காத்திருந்த பெண்ணை ஒரு கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொள்ளையடித்த சம்பவம் மிகவும் கொடூரமான மனிதாபிமானமற்றதாகும். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவதை இது எடுத்துக்காட்டுகிறது.

இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க வேண்டும். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.