
உடல்நிலை காரணமாக அடுத்த 4 நாள்களுக்கு சரத் பவாரின் அனைத்து பொதுநிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
84 வயதான சரத் பவாருக்கு உடல்நலக்குறைவு இருந்தபோதிலும் கடந்த வியாழக்கிழமை புணேவில் நடந்த நிகழ்வு ஒன்றில் 18 நிமிடங்கள் உரையாற்றினார்.
அப்போது அவருக்கு அடிக்கடி இருமல் ஏற்பட்டது. இதனால் அடுத்த 4 நாள்களுக்கு சரத் பவாரின் அனைத்து பொதுநிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) அறிவித்துள்ளது.
இதுகுறித்து புணே நகர கட்சி நிர்வாகி பிரசாந்த் ஜக்தாப் கூறுகையில், "தொடர்ந்து இருமல் காரணமாக சரத் பவார் பேசுவதில் சிரமத்தை அனுபவித்து வருகிறார்.
இதன் விளைவாக அடுத்த நான்கு நாள்களுக்கு அவரது திட்டமிடப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.