உடல்நிலை காரணமாக அடுத்த 4 நாள்களுக்கு சரத் பவாரின் அனைத்து பொதுநிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
84 வயதான சரத் பவாருக்கு உடல்நலக்குறைவு இருந்தபோதிலும் கடந்த வியாழக்கிழமை புணேவில் நடந்த நிகழ்வு ஒன்றில் 18 நிமிடங்கள் உரையாற்றினார்.
அப்போது அவருக்கு அடிக்கடி இருமல் ஏற்பட்டது. இதனால் அடுத்த 4 நாள்களுக்கு சரத் பவாரின் அனைத்து பொதுநிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) அறிவித்துள்ளது.
இதுகுறித்து புணே நகர கட்சி நிர்வாகி பிரசாந்த் ஜக்தாப் கூறுகையில், "தொடர்ந்து இருமல் காரணமாக சரத் பவார் பேசுவதில் சிரமத்தை அனுபவித்து வருகிறார்.
இதன் விளைவாக அடுத்த நான்கு நாள்களுக்கு அவரது திட்டமிடப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞர்களுக்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி: சரத் பவார்

மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில்

மழை இல்லை... வெய்யில் மட்டுமே! அடுத்த 2 நாள்களுக்கு அலர்ட்!

காங்கிரஸுடன் இணையும் சரத் பவார் கட்சி! இறுதிக்கட்ட பேச்சு தீவிரம்!
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



