பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தில்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து: 2 பேர் பலி!

இடிபாடுகளில் சிக்கியிருந்த 12 பேர் மீட்பு!

News image

PTI

Updated On :28 ஜனவரி 2025, 2:57 am

DIN

புது தில்லி : தில்லியின் புராரியில் உள்ள ஆஸ்காா் பப்ளிக் பள்ளி அருகே நேற்று(ஜன. 27) மாலை நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணி நேற்றிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மீட்பு நடவடிக்கைகளில் உதவ 9 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இடிபாடுகளுக்குள் பலா் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களுள் இருவர் உயிரிழந்துவிட்டதாகவும் இன்று(ஜன. 28) காலை நிலவரப்படி, இடிபாடுகளில் சிக்கியிருந்த 12 பேர் மீட்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்ப்புபணி தொடர்ந்து நடைபெறுகிறது.

கட்டடம் இடிந்ததற்கு கட்டமைப்பு பலவீனம் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.