தில்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக அகிலேஷ் யாதவ் பிரசாரம்!

தில்லி தேர்தல்: ஆம் ஆத்மிக்கு ஆதரவாக அகிலேஷ் யாதவ் பிரசாரம்
தில்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக அகிலேஷ் யாதவ் பிரசாரம்!
newindianexpress.com
Published on
Updated on
1 min read

புது தில்லி : தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் வரும் பிப்.5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அங்கு ஆளுங்கட்சியாக உள்ள ஆம் ஆத்மி, எதிர்க்கட்சியான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், இத்தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன. 30-ஆம் தேதி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுடன் இணைந்து அகிலேஷ் யாதவ் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’இண்டியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜவாதி காங்கிரஸுடன் நெருக்கமான உறவை கடைப்பிடிக்கிறது. இந்த சூழலில், தில்லி தேர்தலில் காங்கிரஸுக்கு எதிர் துருவத்தில் களம் காணும் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக அகிலேஷ் யாதவ் பரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரிக்கவுள்ளது தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com