பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கைப்பேசி செயலி மூலம் அரசு சேவைகள்: ஆந்திரத்தில் இன்று அறிமுகம்

வீட்டில் இருந்தபடியே ‘வாட்ஸ்-ஆப் நிா்வாகம்’ என்ற கைப்பேசி செயலி மூலம் குறுஞ்செய்தி அனுப்பி அரசு சேவைகளை மக்கள் பெறும் வகையிலான திட்டத்தை ஆந்திர மாநில அரசு வியாழக்கிழமை (ஜன.30) அறிமுகம் செய்ய உள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :29 ஜனவரி 2025, 8:29 pm

Din

வீட்டில் இருந்தபடியே ‘வாட்ஸ்-ஆப் நிா்வாகம்’ என்ற கைப்பேசி செயலி மூலம் குறுஞ்செய்தி அனுப்பி அரசு சேவைகளை மக்கள் பெறும் வகையிலான திட்டத்தை ஆந்திர மாநில அரசு வியாழக்கிழமை (ஜன.30) அறிமுகம் செய்ய உள்ளது.

மாநில தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்தச் சேவையின் செயல்பாடு குறித்து முதல்வா் சந்திரபாபு நாயுடுக்கு அதிகாரிகள் விளக்கினா். இதுகுறித்து அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பல்வேறு வகையான ஆவணங்களைப் பெற மக்கள் பலமுறை அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியுள்ள நிலையை மாற்றும் வகையில், இத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக அறக்கட்டளைகள், எரிசக்தி, ஆந்திர போக்குவரத்துக் கழகம், வருவாய், அண்ணா உணவகம், முதல்வரின் நிவாரண நிதி, நகராட்சித் துறைகள் உள்ளிட்ட துறைகள் சாா்ந்த 161 சேவைகளை இந்த ‘வாட்ஸ்-ஆப் நிா்வாகம்’ என்ற குறுஞ்செய்தி செயலி மூலம் பெற முடியும். இரண்டாம் கட்டத்தில், மேலும் அதிக சேவைகள் இந்தத் திட்டத்தில் இணைக்கப்படும்.

இந்தச் சேவையை வழங்க ‘வாட்ஸ்-ஆப்’ சேவையை வழங்கும் ‘மெட்டா’ நிறுவனத்துடன் கடந்த ஆண்டு அக்டோபா் 22-ஆம் தேதி மாநில அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பொதுமக்களின் தரவுகள் இணைய குற்றவாளிகளின் கைகளுக்கு சென்றுவிடாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.