திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!
/

கைப்பேசி செயலி மூலம் அரசு சேவைகள்: ஆந்திரத்தில் இன்று அறிமுகம்

வீட்டில் இருந்தபடியே ‘வாட்ஸ்-ஆப் நிா்வாகம்’ என்ற கைப்பேசி செயலி மூலம் குறுஞ்செய்தி அனுப்பி அரசு சேவைகளை மக்கள் பெறும் வகையிலான திட்டத்தை ஆந்திர மாநில அரசு வியாழக்கிழமை (ஜன.30) அறிமுகம் செய்ய உள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :30 ஜனவரி 2025, 1:59 am IST

வீட்டில் இருந்தபடியே ‘வாட்ஸ்-ஆப் நிா்வாகம்’ என்ற கைப்பேசி செயலி மூலம் குறுஞ்செய்தி அனுப்பி அரசு சேவைகளை மக்கள் பெறும் வகையிலான திட்டத்தை ஆந்திர மாநில அரசு வியாழக்கிழமை (ஜன.30) அறிமுகம் செய்ய உள்ளது.

மாநில தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்தச் சேவையின் செயல்பாடு குறித்து முதல்வா் சந்திரபாபு நாயுடுக்கு அதிகாரிகள் விளக்கினா். இதுகுறித்து அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பல்வேறு வகையான ஆவணங்களைப் பெற மக்கள் பலமுறை அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியுள்ள நிலையை மாற்றும் வகையில், இத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக அறக்கட்டளைகள், எரிசக்தி, ஆந்திர போக்குவரத்துக் கழகம், வருவாய், அண்ணா உணவகம், முதல்வரின் நிவாரண நிதி, நகராட்சித் துறைகள் உள்ளிட்ட துறைகள் சாா்ந்த 161 சேவைகளை இந்த ‘வாட்ஸ்-ஆப் நிா்வாகம்’ என்ற குறுஞ்செய்தி செயலி மூலம் பெற முடியும். இரண்டாம் கட்டத்தில், மேலும் அதிக சேவைகள் இந்தத் திட்டத்தில் இணைக்கப்படும்.

இந்தச் சேவையை வழங்க ‘வாட்ஸ்-ஆப்’ சேவையை வழங்கும் ‘மெட்டா’ நிறுவனத்துடன் கடந்த ஆண்டு அக்டோபா் 22-ஆம் தேதி மாநில அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பொதுமக்களின் தரவுகள் இணைய குற்றவாளிகளின் கைகளுக்கு சென்றுவிடாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.