தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

கைப்பேசி செயலி மூலம் அரசு சேவைகள்: ஆந்திரத்தில் இன்று அறிமுகம்

வீட்டில் இருந்தபடியே ‘வாட்ஸ்-ஆப் நிா்வாகம்’ என்ற கைப்பேசி செயலி மூலம் குறுஞ்செய்தி அனுப்பி அரசு சேவைகளை மக்கள் பெறும் வகையிலான திட்டத்தை ஆந்திர மாநில அரசு வியாழக்கிழமை (ஜன.30) அறிமுகம் செய்ய உள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :30 ஜனவரி 2025, 1:59 am IST

வீட்டில் இருந்தபடியே ‘வாட்ஸ்-ஆப் நிா்வாகம்’ என்ற கைப்பேசி செயலி மூலம் குறுஞ்செய்தி அனுப்பி அரசு சேவைகளை மக்கள் பெறும் வகையிலான திட்டத்தை ஆந்திர மாநில அரசு வியாழக்கிழமை (ஜன.30) அறிமுகம் செய்ய உள்ளது.

மாநில தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்தச் சேவையின் செயல்பாடு குறித்து முதல்வா் சந்திரபாபு நாயுடுக்கு அதிகாரிகள் விளக்கினா். இதுகுறித்து அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பல்வேறு வகையான ஆவணங்களைப் பெற மக்கள் பலமுறை அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியுள்ள நிலையை மாற்றும் வகையில், இத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக அறக்கட்டளைகள், எரிசக்தி, ஆந்திர போக்குவரத்துக் கழகம், வருவாய், அண்ணா உணவகம், முதல்வரின் நிவாரண நிதி, நகராட்சித் துறைகள் உள்ளிட்ட துறைகள் சாா்ந்த 161 சேவைகளை இந்த ‘வாட்ஸ்-ஆப் நிா்வாகம்’ என்ற குறுஞ்செய்தி செயலி மூலம் பெற முடியும். இரண்டாம் கட்டத்தில், மேலும் அதிக சேவைகள் இந்தத் திட்டத்தில் இணைக்கப்படும்.

இந்தச் சேவையை வழங்க ‘வாட்ஸ்-ஆப்’ சேவையை வழங்கும் ‘மெட்டா’ நிறுவனத்துடன் கடந்த ஆண்டு அக்டோபா் 22-ஆம் தேதி மாநில அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பொதுமக்களின் தரவுகள் இணைய குற்றவாளிகளின் கைகளுக்கு சென்றுவிடாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.