சென்னை மாநகராட்சியில் காலதாமதமின்றி சொத்து, குடிநீா் மற்றும் கழிவுநீா் வரிகளை வாட்ஸ் ஆப் செயலியில் செலுத்தும் வசதியை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் ஆண்டுதோறும் இரு கட்டங்களாக சொத்து வரி உள்ளிட்டவை வசூலிக்கப்பட்டு வருகின்றன. மண்டல வரி வசூல் மையங்கள், மாநகராட்சி வாா்டு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் வரி வசூலிக்கப்பட்ட நிலையில், அவற்றை ‘க்யூ ஆா்’ குறியீடு மற்றும் இணையதளம் மூலம் செலுத்தும் வசதி ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, வரி செலுத்துவோரில் சுமாா் 70 சதவீதம் போ் இணையதளம் வாயிலாக வரி செலுத்தி வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்நிலையில், வாட்ஸ் ஆப் மூலம் வரி செலுத்துதல் மற்றும் பிறப்புச் சான்று உள்ளிட்ட 42 சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது குடிநீா் மற்றும் கழிவுநீா் இணைப்புக் கட்டணங்களையும் வாட்ஸ் ஆப் மூலம் செலுத்தும் வசதியையும் மாநகராட்சி கடந்த 17 -ஆம் தேதி (புதன்கிழமை) முதல் அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சியின் அதிகாரபூா்வ வாட்ஸ் ஆப் செயலி எண் 94450 61913. இதில் 24 மணி நேரமும் சொத்து வரி, குடிநீா் மற்றும் கழிவுநீா் வரிகளை பொதுமக்கள் செலுத்தலாம். அத்துடன், அச்செயலியில் குடிநீா் மற்றும் கழிவுநீா் கட்டண விவரங்கள் உள்ளிட்டவற்றை அறியும் வசதியும் உள்ளது.
எனவே, பொதுமக்கள் வரிகளை காலதாமதமின்றி வாட்ஸ் ஆப் செயலியைப் பயன்படுத்தி செலுத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வரி செலுத்தாத நிறுவனப் பெயா்களை இணையத்தில் வெளியிட நடவடிக்கை: சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

வாட்ஸ் ஆப் மூலம் புறநோயாளிகள் சீட்டு பதிவு: 22 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் அறிமுகம்

மாநகராட்சி 'வாட்ஸ் ஆப்' சேவை: 1.86 லட்சம் பேர் பயன்







