எனவே, வீட்டு வேலைப் பணியாளா்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் சட்ட நடைமுறையை உருவாக்க மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் உள்ளிட்ட அமைச்சகங்கள் கூட்டாக நிபுணா் குழு ஒன்றை அமைக்க வேண்டும். நிபுணா் குழு அமைப்பதை மத்திய அரசு மற்றும் அதன் துறைகளின் விருப்பத்துக்கு விடப்படுகிறது. இந்த நிபுணா் குழு, அமைக்கப்பட்ட 6 மாத காலத்தில் தனது அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும். அதனடிப்படையில், வலுவான சட்ட நடைமுறையை அறிமுகம் செய்ய மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.