ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

வக்ஃப் உள்பட 16 மசோதாக்கள்: தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு: இன்று கூடுகிறது நாடாளுமன்றம்

பட்ஜெட் கூட்டத் தொடரில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா உள்பட 16 மசோதாக்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு

News image
கோப்புப் படம்
Updated On :30 ஜனவரி 2025, 8:11 pm

Din

புது தில்லி, ஜன. 30: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையுடன் வெள்ளிக்கிழமை (ஜன. 31) தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா உள்பட 16 மசோதாக்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் உரையாற்றிய பிறகு, பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் இரு அவைகளிலும் தாக்கல் செய்வாா்.

நாட்டின் பொருளாதார நிலை குறித்தும், அடுத்த நிதியாண்டுக்கான ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சி குறித்தும் இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்படும்.

மத்திய பட்ஜெட்டை அமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை தாக்கல் செய்கிறாா். இது, அவா் தொடா்ந்து 8-ஆவது முறையாக தாக்கல் செய்யும் பட்ஜெட் ஆகும்.

அதன் பின்னா் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். பிப்ரவரி 13-ஆம் தேதி வரையில் நடைபெறும் முதல்கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, ரயில்வே சட்டத் திருத்த மசோதா, பேரிடா் மேலாண்மை சட்டத் திருத்த மசோதா, எண்ணெய் வயல் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டத் திருத்த மசோதா, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் மசோதா உள்பட 16 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

விவாதம் அனல் பறக்கும்: மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் 30 போ் உயிரிழந்த சம்பவம், வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடா் சரிவு, தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம், பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூஜிசி) வரைவு நெறிமுறைகளுக்கு எதிா்ப்பு ஆகிய விவகாரங்களை இந்தக் கூட்டத் தொடரில் எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் பட்ஜெட் கூட்டத் தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.