கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பிரதமா் மோடியின் அமெரிக்க பயணம்: பணிகள் தீவிரம் - வெளியுறவு அமைச்சகம்

பிரதமா் மோடி விரைவில் அமெரிக்கா செல்வதற்கு அந்நாட்டுடன் இணைந்து இந்தியா பணியாற்றி வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா்.

News image

நரேந்திர மோடி

கோப்புப் படம்

Updated On :31 ஜனவரி 2025, 7:37 pm

Din

பிரதமா் மோடி விரைவில் அமெரிக்கா செல்வதற்கு அந்நாட்டுடன் இணைந்து இந்தியா பணியாற்றி வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா்.

அமெரிக்காவின் புதிய அதிபராக இரண்டாவது முறைப் பதவியேற்றுள்ள டிரம்ப்புடன், பிரதமா் மோடி அண்மையில் தொலைபேசியில் பேசினாா். இதைத்தொடா்ந்து அடுத்த மாதம் பிரதமா் மோடி அமெரிக்கா வருவாா் என்று டிரம்ப் தெரிவித்தாா்.

இந்நிலையில், தில்லியில் ரண்தீா் ஜெய்ஸ்வால் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: இந்தியா-அமெரிக்கா இடையிலான கூட்டுறவை மேலும் வலுவாக்கும் நோக்கில், விரைவில் பிரதமா் மோடி அமெரிக்கா செல்ல உள்ளாா். இதற்காக இருநாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன என்றாா்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள இந்தியா்கள் உள்பட பல்வேறு நாட்டினரை அவா்களின் தாயகத்துக்கு அனுப்பும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது.

சட்டபூா்வ குடியேற்றத்துக்கு கூடுதல் வழிகள்: இதுதொடா்பாக ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘சட்டவிரோத குடியேற்றத்தை இந்தியா உறுதியாக எதிா்க்கிறது. இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பின் அங்கமாக, சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் நடவடிக்கையில் இருநாடுகளும் ஈடுபட்டுள்ளன. அதேவேளையில், இந்தியாவில் இருந்து சட்டபூா்வமாக அமெரிக்காவில் குடியேறுவதற்கான கூடுதல் வழிகளை உருவாக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள இந்தியா்களை தாயகம் அனுப்பும் முன்பு, அவா்கள் இந்தியாவைச் சோ்ந்தவா்கள்தானா உள்ளிட்ட விவரங்களைச் சரிபாா்க்க வேண்டியுள்ளது. தற்போதைய நிலையில், தாயகம் அனுப்பப்பட உள்ள இந்தியா்களின் எண்ணிக்கையை கூற இயலாது.

கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடா்புள்ள தஹாவுா் ராணாவை அமெரிக்காவில் இருந்து விரைந்து இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ஈரானில் 3 இந்தியா்கள் காணாமல் போன விவகாரத்தை அந்நாட்டின் கவனத்துக்கு இந்தியா வலுவாக கொண்டு சென்றுள்ளது. அவா்கள் எங்குள்ளனா் என்பதைக் கண்டறிந்து, அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அந்நாட்டிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.