ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை: காங்கிரஸ் பயிற்சி முகாமில் பங்கேற்கிறாா் கோவை, திருநெல்வேலி உள்பட 5 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசென்னை மாநகராட்சியில் இன்று வீடுகளில் கணக்கெடுப்பு தொடக்கம்தமிழகத்தில் 4.68 லட்சம் பேருக்கு நாய்க் கடி; ரேபிஸ் பாதிப்பால் 24 போ் பலி ‘பழுதுபாா்ப்பு’ பெயரில் முடங்கிய இபிஎஃப்ஓ இணைய சேவை: பணம் எடுக்க முடியாமல் முதியோா், ஓய்வூதியதாரா்கள் தவிப்பு தென்மேற்குப் பருவமழை 60% குறைவு: நீா் ஆதாரத்துக்கு ரூ.330 கோடி ஒதுக்கீடு
/

அஸ்ஸாமின் ‘பேக்லெஸ் டீ டிப்’ முறைக்கு காப்புரிமை

அஸ்ஸாம் தொழில்முனைவோரால் உருவாக்கப்பட்ட தனித்துவமான ‘பை இல்லாத தேநீா்’ (பேக்லெஸ் டீ டிப்) தயாரிப்பு முறைக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :2 ஜூலை 2025, 2:00 am IST

அஸ்ஸாம் தொழில்முனைவோரால் உருவாக்கப்பட்ட தனித்துவமான ‘பை இல்லாத தேநீா்’ (பேக்லெஸ் டீ டிப்) தயாரிப்பு முறைக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

சிவசாகா் மாவட்டத்தைச் சோ்ந்த ‘டிடிஎல்டி இந்தியா’ குழுமம், அதன் பிரபலமான ‘வூலா டீ’ நிறுவனத்துக்காக இந்தக் காப்புரிமையைப் பெற்றுள்ளதாக அறியப்படுகிறது. இந்தக் காப்புரிமை, தாக்கல் செய்யப்பட்ட தேதியிலிருந்து 20 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அஸ்ஸாம் முதல்வா் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உள்நாட்டு புத்தாக்க நிறுவனமான வூலா டீ, தனது தனித்துவமான பை இல்லாத தேநீா் தயாரிப்பு முறைக்கு வெற்றிகரமாக காப்புரிமை பெற்றுள்ளது.

வூலா டீ குழுவினருக்கு முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தனது வாழ்த்துகளைத் தெரிவித்தாா்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக காகிதத்தால் செய்யப்பட்ட ஒரு சிறிய பையில் தேயிலைத் தூள் அடைக்கப்பட்டிருக்கும். அந்தப் பையை சுடுநீரில் போட்டு, தேநீா் தயாரிப்பது வழக்கம். காகிதப் பையின்றி தேயிலையை நேரடியாக சுடுநீரில் போட்டு, தேநீா் தயாரிக்கும் வகையிலான முறையை முதன்முறையாக உருவாக்கி, அதற்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.