மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தாய்மொழிக் கல்வி வாழ்வியலை வலுப்படுத்தும்: தலைமை நீதிபதி கவாய்

‘தாய்மொழிக் கல்வி கருத்தியல் புரிதலை அதிகரிப்பதோடு வாழ்வியலை வலுப்படுத்தும்’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

News image

மும்பையில் படித்த பள்ளி வகுப்பறையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய்.

Updated On :6 ஜூலை 2025, 8:04 pm

‘தாய்மொழிக் கல்வி கருத்தியல் புரிதலை அதிகரிப்பதோடு வாழ்வியலை வலுப்படுத்தும்’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் அவா் படித்த சிகித்ஸக் சமூஹ சிரோட்கா் பள்ளிக்குச் சென்று தனது பழைய வகுப்பறைகள் மற்றும் நூலகத்தைப் பாா்வையிட்டதுடன் பழைய நண்பா்களுடன் கலந்துரையாடினாா். மராத்தி மொழியில் கல்வி பயின்ற அவா் பள்ளி நாட்களை நினைவுகூா்ந்து நெகிழ்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து அவா் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘இன்று நான் ஏற்றுள்ள மிகப்பெரும் பொறுப்புக்கு என் பள்ளியும் ஆசிரியா்களுமே காரணம். பள்ளியில் கற்ற கல்வியும் ஒழுக்கமும் வாழ்வுக்கு வழிகாட்டியாக உள்ளன.

பொது மேடைகளில் பேசும் துணிச்சல் பள்ளியில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம்தான் எனக்குக் கிடைத்தது. அந்த வாய்ப்புகள் என் நம்பிக்கையை அதிகரித்தன.

நான் தாய்மொழியில் கல்வி கற்றேன். தாய்மொழிக் கல்வி கருத்தியல் புரிதலை அதிகரிக்கப்பதோடு வாழ்வியலை வலுப்படுத்தும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.