ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அமா்நாத் யாத்திரை: ஜம்முவிலிருந்து 6வது குழு புறப்பட்டது!

அமா்நாத் யாத்திரையின் ஒரு பகுதியாக ஜம்மு பகவதி நகா் முகாமிலிருந்து 6வது குழு புறப்பட்டுள்ளது.

News image
அமா்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க புறப்பட்ட பக்தர்கள் - கோப்புப்படம்
Updated On :7 ஜூலை 2025, 3:51 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் அமா்நாத் யாத்திரை கடந்த வாரம் தொடங்கிய நிலையில், ஜம்மு அடிவார முகாமிலிருந்து 6வது கட்டமாக 8,600-க்கும் மேற்பட்ட பக்தா்கள் யாத்திரையைத் தொடங்கினா்.

இதுவரை அமர்நாத் நோக்கி புறப்பட்ட குழுவிலேயே இதுதான் மிகப்பெரிய குழு என்றும், நாள்தோறும் அமர்நாத் யாத்திரைக்கான உடனடி முன்பதிவு மையங்களில் ஏராளமான கூட்டம் கூடுவதால், கூடுதல் மையங்கள் திறக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

நடப்பாண்டு ஜூலை 3-ஆம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரையில் தற்போது 6வது கட்டமாக 8,600 பேர் அமர்நாத் பனிலிங்கத்தைக் காண புறப்பட்டுள்ளனர். இந்த அமர்நாத் யாத்திரையானது ஆகஸ்ட் 9 வரை 38 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

காஷ்மீரின் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தா்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

இந்த யாத்திரை, அனந்த்நாக் மாவட்டத்தில் 48 கி.மீ. தொலைவுள்ள நுன்வான்- பஹல்காம் பாரம்பரிய வழித்தடம், கந்தா்பால் மாவட்டத்தில் 14 கி.மீ. தொலைவுள்ள பால்டால் வழித்தடம் என இரு வழித்தடங்களில் நடைபெற்றுவருகிறது.

பஹல்காம் தாக்குதல்

சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, அமா்நாத் யாத்திரைக்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் பல அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜம்மு பகவதி நகா் முகாமில் இருந்து 1,826 பெண்கள், 6,486 ஆண்கள் உள்பட 8,605 போ் கொண்ட ஆறாவது வாகனங்களில் அடிவார முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டு, இன்று காலை அமர்நாத் நோக்கி புறப்பட்டது.

நிகழாண்டு யாத்திரைக்கு இணைய வழியில் இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பதிவு செய்துள்ளனா். கடந்த வாரம் தொடங்கிய அமர்நாத் யாத்திரையில் பங்கேற்று இதுவரை 70 ஆயிரம் பேர் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்திருக்கிறார்கள்.

summary

Amid a multi-tier security cover, more than 8,600 pilgrims left the Bhagwati Nagar base camp in Jammu early Monday to join the annual Amarnath pilgrimage in the Himalayas, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.