திபெத் விவகாரத்தை சீனா கவனமாக கையாள்வதால் இதில் இந்தியா தலையிடுவதற்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது சீன அரசு.
ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 6) தமது 90-ஆவது பிறந்தநாளை ஹிமாசல பிரதேசத்தின் தர்மசாலாவில் உள்ள இல்லத்தில் கொண்டாடிய தலாய் லாமாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததற்கும், அதன் தொடர்ச்சியாக கிரண் ரிஜிஜு உள்பட மத்திய அமைச்சர்கள் அன்னாரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டதற்கும் எதிர்வினையாற்றியுள்ளது சீனா.
இது குறித்து சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் குறிப்பிடுகையில், “14-ஆவது தலாய் லாமாவாகிய இவர், சீன விரோத பிரிவினைவாத செயல்களில் நெடுங்காலமாக ஈடுபட்டு வருகிறார். மதத்தின் பெயரால் சீனாவிடமிருந்து க்ஸிஸாங்(அதாவது திபெத் பகுதியை சீனா க்ஸிஸாங் என்றே குறிப்பிடுகிறது) பிராந்தியத்தைப் பிரிக்க பார்க்கிறார்.
க்ஸிஸாங் விவகாரத்தில் இந்தியா மிகுந்த கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும். இவ்விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு சீனா எதிர்ப்பும் தெரிவித்துள்ளது” என்ரார்.
அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்வதில் சீனாவின் தலையீடு இருக்கக்கூடாது என்று திபெத் மக்கள் விரும்புகிறார்கள். இதற்கு அமெரிக்காவும் ஆதரவு தெரிவிப்பதாக அமெரிக்க அரசும் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Dalai Lama China protests PM Modi’s greetings to Dalai Lama
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி பதவியேற்பு! பிரதமர் மோடி வாழ்த்து!

தமிழக முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து!

மேற்கு வங்கத்தின் புதிய அமைச்சரவைக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



