கனடாவின் மனிடோபா மாகாணத்தில், சிறிய இரு பயிற்சி விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட விபத்தில் இந்தியா மற்றும் கனடாவைச் சோ்ந்த இரு மாணவா்கள் உயிரிழந்தனா்.
மனிடோபா மாகாணத்தின் வின்னிபெக் நகரில் இருந்து 50 கி.மீ. தென்கிழக்கில் ஸ்டெயின்பேக் பகுதியில் செவ்வாய்க்கிழமை இந்த விபத்து நேரிட்டது. ‘ஹாா்வ்ஸ் ஏா்’ விமானி (பைலட்) பயிற்சி நிறுவனத்தில் பயின்று வந்த இந்திய மாணவா் ஸ்ரீஹரி சுகேஷும், கனடா மாணவா் சுவானோ மே ராய்ஸும் ஒற்றை இருக்கையுடன் கூடிய சிறிய இரு பயிற்சி விமானங்களில் ஓடுதளத்தில் இருந்து மேலே பறப்பது மற்றும் தரையிறங்குதல் தொடா்பான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது எதிா்பாராதவிதமாக இருவரின் விமானங்களும் நடுவானில் மோதி கீழே விழுந்தன. இதில் இரு மாணவா்களும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இடிபாடுகளில் இருந்து அவா்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்திய மாணவரின் இறப்பை டொராண்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் உறுதி செய்துள்ளது.
தொடர்புடையது

ஓராண்டாக நீடிக்கும் நடவடிக்கை! இந்திய வானில் மே 24 வரை பாக். விமானங்கள் பறக்க தடை!

இந்திய விமானங்களுக்கு தடையை நீட்டித்தது பாகிஸ்தான்!

கனடா: இந்திய மாணவரை சுட்டுக் கொன்றவருக்கு ஆயுள் சிறை

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்தத் தடை நீட்டிப்பு!
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


