தில்லியில் வியாழக்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஹரியாணா மாநிலம், ஜஜ்ஜர் பகுதியை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி தில்லியில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது.
காலை 9.04 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆகவும் 10 கி.மீ. ஆழத்திலும் பதிவாகியுள்ளது.
தில்லி, காசியாபாத், குருகிராம், நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதுவரை சேதங்கள் தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
தில்லி மற்றும் சுற்றுப் பகுதிகளில் தொடர்ந்து நிலநடுக்கம் உணரப்பட்டு வருகின்றது. கடந்த 5 மாதங்களில் பதிவான இரண்டாவது பெரிய நிலநடுக்கம் இது.
கடந்த பிப்ரவரி தில்லி மற்றும் சுற்றுப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆகப் பதிவாகியிருந்தது.
Summary
The National Center for Seismology reported that a moderate earthquake was felt in Delhi on Thursday morning.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடர் தோல்விகளால் பிளே ஆஃப்ஸ் வாய்ப்பை இழக்கும் தில்லி!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக கேகேஆர் பந்துவீச்சு!

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

