கேரளத்தில் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேருடன் தொடர்பில் இருந்தோர் பட்டியலில் 499 பேர் இடம்பெற்றுள்ளதாக, அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கேரளத்தின், மலப்புறம் மாவட்டத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 18 வயது பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார். மேலும், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவர் தற்போது அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில், நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 2 பேருடன் தொடர்பில் வந்தோரை அடையாளம் கண்டுபிடித்து பட்டியல் ஒன்றை கேரள சுகாதாரத் துறை தயாரித்துள்ளது.
அதில், 499 பேர் இடம்பெற்றுள்ள நிலையில், மலப்புறத்தில் 203 பேரும், கோழிக்கோடில் 178 பேர், பாலக்காடு மற்றும் எர்ணாக்குளம் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மலப்புறத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் உள்பட 11 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், பாலக்காடு மாவட்டத்தில் 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இத்துடன், மாநிலத்தில் 29 பேர் அதிக ஆபத்து பட்டியலிலும், 117 ஆபத்து பட்டியலிலும் இருப்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும், மலப்பறத்தில் புதிய தொற்று பாதிப்பும் உறுதி செய்யப்படாததால், மாவட்ட நிர்வாகம் அங்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளை விலக்கியுள்ளது.
முன்னதாக, கேரளத்தில் நிபா பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்ட 2 வடமாவட்டங்களிலும், ஆய்வு மேற்கொள்ள மத்திய சுகாதாரத் துறையின் தேசிய குழுவொன்று, ஜூன் 9 ஆம் தேதி அங்கு வருகைத் தந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Kerala Health Minister Veena George has said that 499 people have been in contact with two people infected with the Nipah virus in Kerala.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளத்தில் நிபா வைரஸ் பரவல்: போடி சோதனைச் சாவடியில் சுற்றுலா வாகனங்கள் ஆய்வு

கேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கேரளத்தில் பரவும் நிபா காய்ச்சல்: களியக்காவிளையில் சுகாதாரத் துறை சோதனை!

நிபா வைரஸ்: நீலகிரி எல்லையில் சிறப்புக் குழுக்கள்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



