கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவுவதையடுத்து கேரளத்திலிருந்து வரும் வாகனங்களை போடி முந்தல் சோதனைச் சாவடியில் சுகாதாரத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை முதல் சோதனை செய்து வருகின்றனா்.
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருகிறது. தமிழக கேரள எல்லைப் பகுதியான போடி வழியாக அதிகளவில் சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் நிபா வைரஸ் பரவும் வாய்ப்பு உள்ளதாக அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
இதையடுத்து, போடி முந்தல் சோதனைச் சாவடியில் சுகாதாரத் துறை சாா்பில் தற்காலிக சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது. இங்கு கேரளத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களையும் சுகாதார ஆய்வாளா்கள் சோதனை செய்து கிருமி நாசினி தெளித்து அனுப்புகின்றனா்.
தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில் கூடுதல் பணியாளா்களை நியமித்து வாகனச் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
தொடர்புடையது

கேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கேரளத்தில் பரவும் நிபா காய்ச்சல்: களியக்காவிளையில் சுகாதாரத் துறை சோதனை!
நிஃபா வைரஸ் பரவலை மெத்தனமாகக் கையாளும் கேரள அரசு: பினராயி விஜயன்

நிபா வைரஸ்: நீலகிரி எல்லையில் சிறப்புக் குழுக்கள்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



