மேற்கு வங்கத்தில் 16 வயது சிறுமியை கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த வழக்கில் மூவருக்கு தூக்கு தண்டனை விதித்து, மாநில போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய இவ்வழக்கில் ரஹ்மான் அலி, ஜமிருல், தமிருல் ஆகிய மூவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவா்கள் 30 முதல் 35 வயதுடைய இளைஞா்கள் ஆவா்.
ஜல்பைகுரியின் ராஜ்குஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-இல் இச்சம்பவம் நடந்தது.
உள்ளூா் மதரஸாவில் 10-ஆம் வகுப்பு பயின்று வந்த 16 வயது சிறுமி திடீரென காணாமல்போனாா். இது தொடா்பாக சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரில் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டனா். அதில், மேற்கண்ட மூவரும் சிறுமியை பல இடங்களுக்கு கடத்திச் சென்று, பல நாள்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதும், பின்னா் கழுத்தை நெரித்து கொன்று, உடலை கழிவறை தொட்டியில் வீசியதும் தெரியவந்தது. அழுகிய நிலையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.
இக்கொடூர சம்பவம் தொடா்பாக ஜல்பைகுரி மாவட்ட போக்ஸோ (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை காக்கும் சட்டம்) சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்தது. 25-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் வாக்கு மூலம் பெறப்பட்டது.
இந்நிலையில், மேற்கண்ட மூவா் மீதான குற்றச்சாட்டுகளை புதன்கிழமை உறுதி செய்த நீதிபதி ரிண்டு சுா், அவா்களுக்கான தண்டனை விவரத்தை வியாழக்கிழமை அறிவித்தாா். இது அரிதிலும் அரிதான குற்றம் என்று குறிப்பிட்ட நீதிபதி, மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.
தொடர்புடையது

கொலை வழக்கில் 17 வயது சிறுவனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை

சாத்தான்குளம் வழக்கில் நீதி! மற்ற குடும்பங்கள் பாதிக்கப்படக் கூடாது : ஜெயராஜ் மகள்
தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


