மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஜம்மு-காஷ்மீரின் வுலர் ஏரியில் பூத்த தாமரை! 30 ஆண்டுகளுக்குப் பின்

ஜம்மு-காஷ்மீரின் வுலர் ஏரியில் 30 ஆண்டுகளுக்குப் பின் தாமரை மலர்ந்துள்ளது.

News image
ஏரியில் மலர்ந்துள்ள தாமரை- பிடிஐ
Updated On :12 ஜூலை 2025, 12:55 pm

பிடிஐ

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப் பெருக்குக்கு ஏற்பட்டபிறகு, முதல் முறையாக ஜம்மு-காஷ்மீரின் வுலர் ஏரியில் தாமரை மலர்கள் மலர்ந்துள்ளன.

கடந்த 1992 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ளம், வுலர் ஏரியின் வளமான சுற்றுச்சூழல் அமைப்பை அழித்ததைத் தொடர்ந்து, ஆசியாவின் இரண்டாவது பெரிய நன்னீர் ஏரியான வடக்கு காஷ்மீரில் உள்ள வுலர் ஏரியில் தற்போதுதான் தாமரை மலர்ந்துள்ளது.

அதாவது, கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, நன்னீர் ஏரியில் தாமரை மீண்டும் மலர்ந்துள்ளதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

200 சதுர கிலோ மீட்டர் தொலைவுக்குப் பரவியிருக்கும் இந்த ஏரியில், இளஞ்சிவப்பு நிறத்தில் மலர்ந்திருக்கும் தாமரை மலர்கள், சுற்றுச்சூழலுக்கு முக்கியமானது மட்டுமல்ல, அப்பகுதி மக்களின் பழைய நினைவுகளையும் மீட்டெடுத்துள்ளது.

பந்திப்போரா மாவட்டத்தின் சோபோர் நகரிலிருந்து, பாரமுல்லா மாவட்டம் வரை இந்த ஏரி விரிந்து பரந்து காணப்படுகிறது. இது அதிசயம் இன்றி வேறில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் பல முறை இந்த ஏரியில் தாமரையின் விதைகளைத் தூவி வந்தோம். ஆனால் எந்தப் பயனும் இல்லை. வெள்ளத்தால் ஏரியில் நிரம்பியிருந்த வண்டல் மண்தான் அதற்குக் காரணம்.

பிறகு, இந்த ஏரியில் வண்டல் மண் தூர்வாரப்பட்டு, தாமரை விதைகள் விதைக்கப்பட்டது. கடந்த ஆண்டு தாமரைச் செடிகள் வளரத் தொடங்கியிருந்த நிலையில், இந்த ஆண்டு தாமரை மலர்கள் மலர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

summary

After nearly three decades, the lotus has bloomed once again in the Wular Lake in north Kashmir - the second largest fresh-water lake in Asia - thanks to conservation efforts after the devastating floods in 1992 had wreaked havoc with its rich ecosystem.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.