தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்காங்கிரஸ் கட்சிக்கு திமுக கண்டனம்!பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்திமுக எம்எல்ஏக்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்! தொங்கு சட்டப்பேரவை என்பது என்ன? இதற்கு முன் தமிழகத்தில் நேரிட்டிருக்கிறதா?ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்!திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?ஆட்சியமைக்க அழைக்கப்படுவாரா விஜய்? ஆளுநர் மாளிகை விளக்கம்தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க புதுவை செல்கிறார் இபிஎஸ்! ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!
/

மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: 2 பேருக்கு ஜாமீன் !

ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் 2 பேருக்கு உள்ளூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

News image

சோனம், ராஜா ரகுவன்ஷி - (Special arrangement/TNIE)

Updated On :13 ஜூலை 2025, 3:33 pm IST

ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் 2 பேருக்கு உள்ளூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைத்ததால், தோமர் மற்றும் பல்பீருக்கு உள்ளூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.

அவர்கள் மீது ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றங்கள் சுமத்தப்பட்டதாக அவர்கள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

மேகாலயாவில் இருந்து தப்பி ஓடிய பிறகு சோனம் தங்கியிருந்த இந்தூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் தோமர் ஆவார். மேலும் பல்பீர் அந்த குடியிருப்பின் பாதுகாவலராக இருந்தார்.

இவர்கள் மீது நீதித் துறைக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் ஆதாரங்களை சேதப்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி கடந்த மே 23ஆம் தேதி மேகாலயாவுக்கு மனைவி சோனமுடன் தேனிலவு சென்றபோது காணாமல் போனார்.

ஜூன் 2 ஆம் தேதி கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தின் சோஹ்ரா பகுதியில் உள்ள ஆழமான பள்ளத்தாக்கில் இருந்து அவரது சிதைந்த உடல் கண்டெடுக்கப்பட்டது.

மே 11 ஆம் தேதி சோனமை, ராஜா மணந்தார்.

ராஜா ரகுவன்ஷியைக் கொலை செய்ய ஆகாஷ் ராஜ்புத், விஷால் சிங் சௌஹான் மற்றும் ஆனந்த் குர்மி ஆகியோரை பயன்படுத்தியதாகக் சோனம் மற்றும் ராஜ் குஷ்வாஹா மீது குற்றம் சாட்டப்பட்டது.

சோனம், ராஜ் குஷ்வாஹா மற்றும் கைது செய்யப்பட்ட மூன்று கொலையாளிகளும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர்.

Summary

A local court here has granted bail to Lokendra Singh Tomar and Balbir Ahirwar, two co-accused in the murder of Indore businessman Raja Raghuvanshi in May this year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.