ஹைதராபாத்தில் இன்று அதிகாலை குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் மீட்கப்பட்டனர்.
மொகல்புராவில் உள்ள ஐஜாஸ் குடியிருப்பின், பிளாட் எண் 201இல் உள்ள மேல் மாடிக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்துக்குத் தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கட்டடத்தில் சிக்கியிருந்த ஐந்து பேரைத் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
வீடுகளில் உள்ள சுவிட்ச்போர்டில் ஏற்பட்ட மின்கசிவு தீ விபத்துக்குக் காரணமாக அமைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்கப்பட்டவர்களில் சையத் அப்துல் கரீம் சாஜித் (55, உடல் ஊனமுற்றோர்), அதியா பேகம் (47), ஃபர்ஹீன் பேகம் (27), சையத் இமாம் ஜாபர் (19) முகமது ரிஸ்வான் உத்தின் (38) ஆகியோர் அடங்குவர்.
தீயணைப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, தீயணைப்பு கட்டுப்பாட்டுக் குழு ஒரு ரோபோ மற்றும் இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தது, மேலும் யாருக்கும் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை. தீ அணைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
Summary
Five persons were rescued after a fire broke out at a residential building in the early hours of Wednesday in Hyderabad.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தோனேசியாவில் ரயில் விபத்து! பலி எண்ணிக்கை 14-ஆக உயர்வு!

தேனியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

திருச்சூரில் பட்டாசு வெடித்து விபத்து: 13 பேர் பலி; 40 பேர் படுகாயம்
தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


