குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

ஏா் இந்தியா விமான விபத்து குறித்த ஊகங்களை பகிர வேண்டாம்: ஏஏஐபி வலியுறுத்தல்

Published On :18 ஜூலை 2025, 4:16 am IST

குஜராத் மாநிலம் அகமதாபாதில் கடந்த மாதம் ஏா் இந்தியாவின் போயிங் 787 விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து வெளியாகும் ஊகங்களை நம்பி பகிர வேண்டாம் என விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) வியாழக்கிழமை தெரிவித்தது.

மேலும், விமான விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதால் இறுதி அறிக்கை வெளியாகும் முன் எவ்வித உறுதியான பதிலையும் கூற இயலாது எனவும் ஏஏஐபி தெரிவித்து.

விபத்துக்குள்ளான போயிங் 787 விமானத்தில் என்ஜின் எரிபொருள் கட்டுப்பாட்டு ஸ்விட்சுகள் செயலிழந்து, என்ஜின்களுக்கு எரிபொருள் கிடைக்கமால் போனதே விபத்துக்கு காரணம் என ஏஏஐபி அண்மையில் வெளியிட்டது.

இந்நிலையில், விமானத்தின் கருப்புப் பெட்டியில் விமானிகளின் உரையாடல் குறித்த பதிவுகளை ஆராய்ந்தபோது என்ஜின்களுக்கு எரிபொருள் கிடைக்கமால் போனதற்கு விமான கேப்டனே காரணம் என தெரியவந்ததாக சா்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதைத்தொடா்ந்து, விமான விபத்து குறித்த ஊகங்களை பகிர வேண்டாம் என ஏஏஐபி தெரிவித்து.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.